Don't Miss!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜெயம் ரவியும் ஷாமும் எப்போது பாலா கேம்புக்கு வரப் போகிறார்கள்?
ஜெயம் ரவி மற்றும் ஷாம் இருவருக்கும் தன் படங்களில் வாய்ப்பளிக்கப் போவதாக பொது மேடையிலேயே அறிவித்துவிட்டார் இயக்குநர் பாலா.
நேற்று நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஜெயம் ராஜா, எப்படியாவது தன் தம்பி ஜெயம் ரவிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என இயக்குநர் பாலாவிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த விழாவுக்கு நடிகர் ஷாமும் வந்திருந்தார். பாலா படத்தில் நடிக்கும் கனவு தனக்கும் இருப்பதாகக் கூறினார் ஷாம்.
இதைக் கேட்ட பாலா, கண்டிப்பாக இருவரும் என் படத்தில் நடிப்பார்கள் என உறுதியளித்தார்.
அத்துடன் ஷாம் நடிப்பில் வெளியான ஆறு மெழுகுவர்த்திகள் படத்தில் பெரும் சிரமம் எடுத்து நடித்த ஷாமை நான் பாராட்டுகிறேன் என்றும், அவர் பட்ட சிரமத்துக்காகவே அடுத்த படத்தில் ஷாமுக்கு வாய்ப்புத் தருகிறேன் என்றும் கூறினார்.
ஜெயம் ரவிக்கும் நிச்சயம் வாய்ப்பு தருவதாகக் கூறிய பாலா, அவரது கால்ஷீட் விஷயங்களை அவர் அப்பாவிடம் பேசுகிறேன், என்றும் தெரிவித்தார்.
ஆக ஜெயம் ரவியும் ஷாமும்தான் பாலாவின் அடுத்த பட ஹீரோக்கள்...