Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீண்டும் விக்ரம்- பாலா கூட்டணி...!
மீண்டும் விக்ரமுடன் இணைந்து புதிய படம் உருவாக்கும் முயற்சியில் உள்ளார் இயக்குநர் பாலா.
விக்ரம் ஒரு நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடிக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு தோள்கொடுத்து, சேது என்ற பெரிய ஹிட் படம் தந்தவர் பாலா.
அதற்குப் பிறகு இருவரும் இணைந்தது பிதாமகன் படத்தில். இந்தப் படத்துக்காக விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
விக்ரமின் இன்றைய நிலைக்குக் காரணம் சந்தேகமில்லாமல் பாலாதான்.
பிதாமகனுக்குப் பிறகு இருவரும் இணையாமல் இருந்தனர்.
இப்போது மீண்டும் இருவரும் சேர்ந்து படம் பண்ண ஆர்வமாக உள்ளனர்.
அரிமா நம்பி படம் இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வரும் விக்ரம், அந்தப் படம் முடிந்ததும் பாலா இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம்.
தாரை தப்பட்டை படத்தை முடித்துவிட்ட பாலா சமீபத்தில் விக்ரமைச் சந்தித்து தனது அடுத்த படத்தின் கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார். முழுக்கதையையும் சொல்லாமல், அப்பாத்திரத்தின் தன்மையை மட்டும் விக்ரமிடம் விளக்கியிருக்கிறார்.