Don't Miss!
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தாரை தப்பட்டையைத் தொடர்ந்து மல்டி ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பாலா
சென்னை: தாரை தப்பட்டை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலா அடுத்ததாக முன்னணி நடிகர்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பரதேசி படத்தைத் தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் தற்போது மும்முரமாக பாலா இறங்கி இருக்கிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.
இப்படம் இயக்குநர் பாரதிராஜாவின் கனவுப் படமான குற்ற பரம்பரை கதையின் மையக்கருவை தழுவி உருவாகலாம் என்று கூறுகின்றனர். சேது, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் விக்ரமுடன் மீண்டும் பாலா கைகோர்க்கலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளையர்கள் ஆட்சியின்போது வாழ்ந்த மரபுப் பழங்குடியினர் பற்றிய படமாக இப்படத்தின் கதை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமர்சகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற அவன் இவன் மற்றும் நான் கடவுள் பாணி வகையில் இப்படத்தினை பாலா எடுக்கவிருக்கிறாராம்.
விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.