Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
100வது படத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகுகிறார் பாலகிருஷ்ணா!
சினிமாவை விட்டு விலகப் போவதாக தெலுங்கு திரையுலகின் பிரபல நாயகன் பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராகத் திகழ்பவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் மறைந்த முன்னாள் நடிகரும், ஆந்திராவின் முதல்வருமாகத் திகழ்ந்த என்.டி.ராமாராவின் மகன்.
இவர், நடித்த பல படங்கள் தெலுங்கு திரையுலகில் பெரும் வெற்றிப் பெற்றன. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாலகிருஷ்ணா தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 40 வருடங்களாக சினிமாவில் கோலாச்சி வரும் பாலகிருஷ்ணா, தற்போது சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தனது 100-வது படத்தை முடித்த கையோடு சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் களமிறங்க பாலகிருஷ்ணா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாலகிருஷ்ணா தற்போது தனது 99-வது படமாக ‘டிக்டேட்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, போயாபதி சீனு இயக்கும் தனது 100-வது படத்தில் அடுத்த ஆண்டு நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தை முடித்த பிறகு, 2017-ஆம் ஆண்டு முதல் பாலகிருஷ்ணா தீவிர அரசியலில் களமிறங்கப் போவதாக கூறப்படுகிறது. அதன் முதற்கட்டமாக தான் எம்எல்ஏவாக உள்ள ஹிந்துபூர் தொகுதியின் வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்டப் போவதாக அறிவித்துள்ளார்.