Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘பெங்களூர் டேஸ்’ ஆர்யா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் இப்போ சிங்கப்பூர் டேஸ்?
மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த "பெங்களூர் டேஸ்" தமிழ் ரீமேக்கில் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான், ஃபகத் ஃபாசில், நித்யா மேனன், நஸ்ரியா, நிவின் பவுலி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான படம் "பெங்களூர் டேஸ்".
இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கை " பொம்மரீலு பாஸ்கர் இயக்கவிருக்கிறார். அதற்கான நடிகர், நடிகைகள் யார் என்பது நீண்ட நாளாகவே குழப்பத்தில் இருந்து வந்தது.
விலகிய சமந்தா சித்தார்த்
இப்படத்தில் சமந்தா, சித்தார்த் நடிப்பதாக இருந்தது. அவர்களின் காதல் பிரச்னையால் இவர்கள் நடிக்கவில்லை என்ற செய்தி வெளியாகியது.
ஆர்யா – ஸ்ரீதிவ்யா
இறுதியில் பகத் பாசில், நஸ்ரியா, நிவின் பவுலி போன்றவர்களின் கேரக்டர்களில் முறையே ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிக்க உள்ளனர்.
ராணா டகுபதி
மேலும் துல்கர் சல்மான் வேடத்தில் ராணா நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யவிருக்கின்றது.
சிங்கப்பூரில் கதை
சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், பெங்களூரை மையமாக வைத்து மலையாளத்தில் படத்தின் கதை நகரும். அதை மாற்றி சிங்கப்பூரில் நடப்பது போன்று படத்தின் கதையை மாற்றவிருப்பதாகவும், படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் எனவும் இயக்குநர் பொம்மரீலு பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கிருஸ்துமஸ் நாளில்
இந்தப்படம் மார்ச் 20ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் கிருஸ்துமஸ் நாளில் படம் வெளியாகும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.