Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கைக்குழந்தைக்கு தாயாக ரேஷ்மி மேனன் நடிக்கும் 'பயமா இருக்கு'!
தேநீர் விடுதி, கிருமி, மாயா, உறுமீன் போன்ற படங்களில் நடித்த ரேஷ்மி மேனன் தனது அடுத்த படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்.
இப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாம். சந்தோஷ், ரேஷ்மி மேனன், கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன், விஜய் டிவி ஜெகன், லொள்ளு சபா ஜிவா, பரணி போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும், இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்து கொண்டிருக்கிறது.
படத்தின் இயக்குநர் ஜவகருக்கு இது முதல் படம். படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "நாயகி ரேஷ்மி மேனன் கைக் குழந்தைக்கு அம்மாவாக இப்படத்தில் நடித்திருக்கிறார். திருமணமான பின்பு கணவன் மனைவிக்குள் இருக்கும் காதலை யதார்த்தமாகவும் சிறப்பாகவும் காட்டிள்ளனர் சந்தோஷ் மற்றும் ரேஷ்மி மேனன்.
இப்படத்தில் வரும் வீடு படத்தில் முக்கிய பங்காற்றுகிறது, கேரளாவிலுள்ள இந்த வீட்டிற்கு செல்ல தரைவழி போக்குவரத்து கிடையாது, கிட்டத்தட்ட படகில் 3 மணி நேரம் பயணம் செய்தால்தான் படப்பிடிப்பு நடக்கும் வீட்டிற்கே செல்ல முடியும், அந்தளவுக்கு சிரமப்பட்டு படத்தை எடுத்திருக்கிறோம்.
மேலும் நான் கடவுள் ராஜேந்திரனை இப்படத்தில் முற்றிலும் வேறுவிதமாக பார்க்கப்போகிறீர்கள். நடிப்புக்கு தீணி போடும் விதமாக அவரின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஆரம்பம் முதல் இறுதிவரை கதாநாயகன், கதாநாயகியுடன் இவர் டிராவல் செய்து கொண்டே இருப்பார். கோவை சரளா சாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார் இவரின் சிஷ்யனாக சேஷு நடித்துள்ளார்," என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மகேந்திரன், இசை - சி.சத்யா, படத்தொகுப்பு கோவிந்தராஜன், கலை - காளிமுத்து, பாடல்கள் - விவேகா மற்றும் நோலன்.