Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போலீசிடம் மேலும் அவகாசம் கேட்கும் பீப் பாய் அனிருத்!
பீப் பாடல் விவகாரத்தில் நேரில் ஆஜராக மேலும் 15 நாள் காலஅவகாசம் கேட்டு இசையமைப்பாளர் அனிருத் சார்பில் கோவை மாநகர காவல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக அளித்த புகாரின் பேரில், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவு உள்பட 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கோவை ரேஸ் கோர்ஸ் சாலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டாவது சம்மன் அனுப்பியபோது, ஜனவரி 2ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அனிருத் சார்பில் அவரது தந்தை ரவி ராகவேந்திராவின் வழக்கறிஞர் செந்தில்குமார் மூலமாக கோவை காவல் நிலையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்தக் கடிதத்தில், அனிருத் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் தமிழகம் வர முடியவில்லை. எனவே அவர் நேரில் ஆஜராவதற்கு 15 நாட்கள் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சிம்பு தனக்கு ஜாமீன் அளிக்குமாறு கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 5ஆம் தேதிக்குள் அவர் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.