Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பீப் பாடல்: நடிகர் சிம்பு முன் ஜாமீன் மனு தாக்கல்... விசாரணை நாளை தொடக்கம்
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். மனு மீதான விசாரணை நாளை தொடங்குகிறது.
பீப் பாடல் விவகாரத்தில் அனிருத்திற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நானே முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன் என்று நடிகர் சிம்பு சமீபத்தில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விவகாரத்தில் இயக்குனரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் தனது பங்கிற்கு தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். தற்போது இந்த விவகாரத்தில் கோவை போலீசார் மீண்டும் சிம்பு, அனிருத் இருவருக்கும் சம்மன் அனுப்பி வருகின்ற 2 ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் சிம்பு, அனிருத் இருவர் மீதும் மேலும் 2 வழக்குகள் புதியதாக போடப்பட்டு உள்ளன.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கில் கோவை போலீசார் 2 வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்புவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை துவங்குகிறது.
பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு அமையுமா? என்பது நாளை தெரிய வரும்.