Don't Miss!
- Technology அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எங்களை பார்த்தா எப்படி தெரியுது?: நடிகர், மனைவியை எச்சரித்த ஜட்ஜய்யா
பெங்களூர்: கன்னட நடிகர் சுதீப் மற்றும் அவரின் மனைவி பிரியாவை பெங்களூர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் தனது மனைவி பிரியாவை பிரிய விவாகரத்து கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்ததோடு சரி அதன் பிறகு சுதீப், பிரியா நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை.
இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுதும் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகவில்லை.
விசாரணை
விவாகரத்து வழக்கு இதுவரை 9 முறை விசாரணைக்கு வந்துவிட்டது. 9 முறையும் சுதீப் மற்றும் பிரியா ஆஜராகவில்லை. மாறாக அவர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி ஏதாவது காரணம் சொல்லி வருகிறார்கள்.
நீதிபதி
சுதீப், பிரியாவின் நடவடிக்கையால் கடுப்பான நீதிபதி அடுத்த விசாரணையின்போது அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
சுதீப்
சுதீப்பும், பிரியாவும் ஏதோ சண்டை போட்ட வேகத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார்களாம். தற்போது அதை உணர்ந்து சேர்ந்து வாழ விரும்புகிறார்களாம். அதனால் தான் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ளார்களாம்.
வில்லன்
சுதீப் தான் நடித்து வரும் வில்லன் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியதும் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-
இதனால்தான் விவாகரத்து.. அந்த நடிகையுடன் இருக்கும்போது உறுதியானது.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி
-
மகளா, கௌரவமா?.. திணறிய ரஜினி?.. சி.எம் வீட்டுக்கு போகச்சொன்னாரா குருநாதர்?.. பிரபலம் இப்படி சொல்றாரே?
-
குரு துரோணர் மகனையே கொண்டு வந்த நாக் அஸ்வின்.. பிரபாஸின் கல்கி படத்தில் அமிதாப் பச்சன் ரோல் என்ன?