Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக பாரதிராஜா
34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. இந்தப் படத்தை என்வி நிர்மல்குமார் இயக்குகிறார்.
ஓம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரதிராஜா தனது மனோஜ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக பாரதிராஜாவுடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார்.
ஒரு வயதான தந்தைக்கும் அவர் மகனுக்குமான பாசப் போராட்டத்தைச் சொல்லும் படம் இது என்கிறார்கள். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடக்கவிருக்கிறது.
பாரதிராஜா இயக்குநராவதற்கு முன், ஹீரோவாகத்தான் முயற்சி செய்தார். அப்போது அந்த ஆசை நிறைவேறவில்லை. புகழ்பெற்ற இயக்குநரான பின்னர் 1980-ல் கல்லுக்குள் ஈரம் படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படத்தை பாரதிராஜா மேற்பார்வையில் நிவாஸ் இயக்கினார். படமும் பாடல்களும் சிறப்பாக அமைந்தும் படம் சுமாராகத்தான் போனது. அதற்குப் பிறகு ஹீரோவாக அவர் நடிக்கவில்லை.
தாவணிக் கனவுகள், ஆயுத எழுத்து, ரெட்டைச் சுழி, பாண்டிய நாடு படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்தார். தாவணிக் கனவுகள் மற்றும் பாண்டிய நாடு படங்களில் அவர் பாத்திரம் சிறப்பாக அமைந்தது.
34 ஆண்டுகளுக்குப் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் பாரதிராஜா.