Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய நடிகை அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ்: தொடரும் அவலம்
மும்பை: போஜ்புரி நடிகையும், மாடலுமான அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் மும்பையில் உள்ள தனது வீட்தில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ்(29). அவர் மும்பை ஜுஹு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார்.
அஞ்சலி போஜ்புரி படங்களில் நடித்துள்ளார். மேலும் மாடலிங்கும் செய்து வந்துள்ளார்.
அஞ்சலி
அஞ்சலியின் உறவினர்கள் நேற்று அவரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
வீடு
உறவினர்கள் அஞ்சலியின் வீட்டு உரிமையாளரிடம் சென்று கதவின் டூப்ளிகேட் சாவியை கேட்டுள்ளனர். டூப்ளிகேட் சாவி போட்டு கதவை திறந்தபோது அஞ்சலி ஃபேனில் தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸ்
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை
அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அஞ்சலி தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைத்ததாக தெரியவில்லை.
|
அம்மா
என் மகள் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார். இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அஞ்சலியின் அம்மா தெரிவித்துள்ளார்.