Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா- கலைப்புலி தாணு
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு விரைவில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு பேசுகையில், "
இவ்விழாவிற்கு விழாவிற்கு வருமாறு இளையராஜா அவர்களை அன்புடன் நான் அழைக்கும்போது, இளையராஜா அவருடைய தாய், தந்தை இடத்தில் பூஜை நடத்திக் கொண்டிருந்தார். நான் கூறியதும் உடனடியாக கலந்து கொள்கிறேன் என்று கூறினார்.
இப்ராகிம் ராவுத்தர் 95 சதவீத தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளார்கள் என்று கூறினார். தயாரிப்பாளர்களாக இருக்கும் 500 பேருக்கும் ஒரு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அவர்களது இல்லம் தேடி செல்லும் அளவுக்கு எங்களுடைய உழைப்பு இருக்கும்.
இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் மெட்டமைத்திருக்கிறார். ஆனால், எந்த பாடலும் மற்றொரு பாடலை தொடாமல் இருக்கும். அவர் ஒரு அட்சயப் பாத்திரம், அமுத ஊற்று.
1000 படங்களைத் தொட்ட அவரது சாதனையைப் பாராட்டும் விதமாக அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகம் சார்பில் மிகப்பெரிய விழாவாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இந்தியாவில் இதுபோன்ற ஒரு விழா நடத்தியிருக்க முடியாது என்கிற அளவுக்கு அது பிரம்மாண்டமாக இருக்கும்," என்றார்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!