Don't Miss!
- News தமிழகத்தில் அதிமுகவுக்கு இதுதான் நடக்க போகுது.. டிடிவி தினகரன் என்ன சொல்லியிருக்கார் பாருங்க
- Finance என்னோட கணக்கே வேற தம்பி.. TCS கே.கிருத்திவாசன் அதிரடி அறிவிப்பு..!
- Lifestyle முருங்கைக்காய் கத்திரிக்காயை வெச்சு ஒருடைம் இப்படி கார குழம்பு செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 108எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
- Automobiles திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
- Sports இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை கழட்டி விட திட்டம்.. ரோஹித் - அகர்கர் சந்திப்பில் ட்விஸ்ட்
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
3 நாட்களாக ஏரியில் கிடந்து உப்பிய நிலையில் கன்னட நடிகர் அனிலின் உடல் மீட்பு
பெங்களூர்: பெங்களூர் அருகே உள்ள ஏரியில் மூழ்கி பலியான கன்னட நடிகர் அனிலின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
துனியா விஜய் ஹீரோவாக நடித்து வரும் மஸ்தி குடி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கடந்த திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு பெங்களூர் அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் நடைபெற்றது.
ஹெலிகாப்டரில் இருந்து விஜய், நீச்சல் தெரியாத வில்லன்கள் உதய் மற்றும் அனில் ஆகியோர் ஏரியில் குதித்தனர். இதில் உதய் மற்றும் அனில் நீரில் மூழ்கி பலியாகினர்.
அவர்களின் உடல்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் ஆகியோர் உள்ளூர் மீனவர்களின் உதவியோடு தேடி வந்தனர். நேற்று உதய்யின் உடல் மீட்கப்பட்டது.
இந்நிலையில் 3 நாட்கள் கழித்து இன்று அனிலின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அனில் மற்றும் உதய்யின் மரண செய்தி அறிந்து திரையுலக பிரபலங்கள் பலர் படத்தின் தயாரிப்பாளர் மீது கோபம் அடைந்துள்ளனர்.