Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாரிசு நடிகையுடன் சண்டையா, எவன் சொன்னது?: இலியானா
மும்பை: முபாரகான் படத்தில் நடித்தபோது இலியானாவுக்கும், அதியா ஷெட்டிக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகின.
அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் அர்ஜுன் கபூர் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் முபாரகான். படத்தில் இலியானா, நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா என்று இரண்டு ஹீரோயின்கள்.
அர்ஜுன் கபூரின் சித்தப்பா அனில் கபூரும் இந்த படத்தில் நடித்துள்ளார்.
சண்டை
ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தால் சண்டை வரும் என்பது எழுதப்படாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் முபாரகான் ஹீரோயின்களுக்கு இடையே சண்டை என்று செய்திகள் வெளியாகின.
இலியானா
செய்தியாளர் சந்திப்பு நடந்தபோது யாரும் கேட்பதற்கு முன்பே அதியாவுடனான சண்டை குறித்து இலியானா பேசினார். தனக்கும், அதியாவுக்கும் இடையே பிரச்சனை எதுவும் இல்லை என்றார்.
சந்தேகம்
செய்தியாளர் சந்திப்பில் இலியானா தானாக முன்வந்து சண்டை பற்றி பேசியது படக்குழுவினர் அவருக்கு சொல்லிக் கொடுத்து பேச வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தை பலருக்கு எழுப்பியுள்ளது.
அதியா ஷெட்டி
இலியானாவுடன் எந்த சண்டையும் இல்லை. அவர் சீனியர் என்பதால் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாக அதியா ஷெட்டி தெரிவித்துள்ளார். இது அதியாவின் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.