Don't Miss!
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
விசாரிக்க மறுத்து முரண்டுபிடித்த சிபிஐயிடமே கலாபவன் மணி வழக்கு ஒப்படைப்பு
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்த வழக்கை விசாரிக்க மறுத்த சிபிஐயிடமே கேரள அரசு இன்று வழக்கை ஒப்படைத்துள்ளது.
மிமிக்ரி கலைஞராக இருந்து நடிகர் ஆனவர் கேரளாவை சேர்ந்த கலாபவன் மணி. மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஒரு கட்டத்தில் எந்த வித துப்பும் கிடைக்கவில்லை என்று விசாரணை நிறுத்தப்பட்டது.
மனு
கலாபவன் மணி அருந்திய மதுவில் விஷம் கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அவரின் மனைவியும், சகோதரரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம்
கலாபவன் மணியின் மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. தங்கள் வசம் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதால் இதை விசாரிக்க முடியாது என்று சிபிஐ மறுத்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
சிபிஐ
கேரள உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் ஒரு மாதம் கழித்து கலாபவன் மணியின் வழக்கை கேரள அரசு சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது.
விசாரணை
மணி இறந்து ஓராண்டுக்கு மேலாகியும் அவர் மரணத்தில் உள்ள மர்மம் மட்டும் நீங்கவில்லை. அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தியும் பலனில்லாமல் போன நிலையில் சிபிஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.