Don't Miss!
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆளும் கட்சிக்கு கட்டுப்பட்டே நடக்கிறது சென்சார் போர்டு... மணிரத்னம் பரபரப்பு புகார்
சென்னை: திரைப்பட தணிக்கைக்குழு சுயமாக செயல்படாமல், அப்போது ஆட்சியில் இருக்கும் கட்சிக்குக் கட்டுப்பட்டு, அதன் விருப்பப்படியே செயல்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார் பிரபல இயக்குநர் மணிரத்னம்.
தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி, முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம்.
இந்நிலையில், கடந்தவாரம் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவையொட்டி நடந்த கருத்தரங்கில் மணிரத்னம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தணிக்கை குழு...
திரைப்பட தணிக்கை குழு சுயமாக செயல்படும் அமைப்பு. அப்படித்தான் செயல்பட வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக இந்த அமைப்பு அப்படி நடந்து கொள்வது இல்லை.
ஆளும் கட்சி கட்டுப்பாட்டில்...
தனது விருப்பப்படி சுயமாக செயல்படும் தன்மையை இழந்து ஆளும் அரசியல் ஆட்சிக்கு கட்டுப்பட்டு, அதன் விருப்பப்படி செயல்படுகிறது.
மும்பை...
எனது மும்பை, இருவர் படங்கள் தணிக்கை குழுவால் பெரும் சோதனையும், இன்னல்களையும் சந்தித்தது. எனவே, இதை குறிப்பிடுகிறேன்.
ரசிகர்கள்...
இன்றைய ரசிகர்கள் திரைப்படம் பற்றி அதிகமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய ரசிப்புத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னேற்றப் பாதையில்...
அதற்கு ஏற்ப திரைப்பட படங்களை வழங்க வேண்டும். திரைப்படத்துறையின் முன்னேற்றத்துக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.