Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
புயல், மழை... தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு தொடக்கவிழா ஒத்திவைப்பு
சென்னை: புயல், மழை காரணமாக நாளை தொடங்கவிருந்த தமிழ் சினிமா நூற்றாண்டு விழா ஒத்தி வை்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழாக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழாக்குழு கவிஞர் இன்குலாப் அவர்களின் இழப்பிற்கு தனது ஆழந்த இரங்கலையும்.. செவ்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழா நாளை 2.12.16 மற்றும் நாளை மறுநாள் 3.12.16 நடைபெறக்கூடிய சூழலில் 'நடா' புயல் உருவாகி சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடும் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தமிழக அரசும், வானிலை ஆய்வுமையமும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.
இச்சூழலில் மக்கள் பங்கேற்பில்லாமல் நடத்துவது என்பது யாருக்கும் பயன் தராததோடு மட்டுமில்லாமல் விழாவும் சிறப்பிக்காது..
எனவே டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு துவக்க விழாவின ஒத்தி வைப்பதாக விழாக்குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்னும் ஒரு சில தினங்களுக்குள் தொடக்க விழாவினை எந்த தேதியில் நடத்துவதென்பதை தெரிவிக்கிறோம்.
-இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.