Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இஸ்லாமிய தலைவர்களுடன் கமல் அண்ணன் சந்திரஹாஸன் பேச்சு
கமல் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு தடை விதித்தது.
இதனால் கமல் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி தடையை நீக்கினார். ஆனால் அன்று இரவே அப்பீல் செய்து அடுத்த நாள் மீண்டும் தடை பெற்றுவிட்டது அரசு. வழக்கு விசாரணை வருகிற 6-ந்தேதி நடக்க உள்ளது.
இந்த நிலையில் 'விஸ்வரூபம்' வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அரசு உதவும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
கமல்ஹாசனும் முஸ்லிம் அமைப்புகளும் முன் வந்து பேசி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு சுமூக தீர்வு கண்டால் இப்படம் திரையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துவிட்டார்.
இதனை கமல் தரப்பிலும் முஸ்லிம் அமைப்புகள் தரப்பிலும் வரவேற்றுள்ளனர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இன்று பிற்பகல் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பேச்சு வார்த்தை நடைபெறும் என தெரிகிறது.
இஸ்லாமிய கூட்டமைப்பில் 24 சங்கங்கள் உள்ளன. அவற்றின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்கள். கமல் தற்போது மும்பையில் இந்தி 'விஸ்வரூபம்' வெளியீட்டில் உள்ளதால், அவரது அண்ணனும் ராஜ்கமல் பிலிம்ஸ் உரிமையாளருமான சந்திரஹாசன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இயக்குநர் அமீரும் கமல் சார்பில் கலந்து கொள்கிறார்.
அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த பேச்சுவார்த்தை நடப்பதால், இது முத்தரப்பு பேச்சுவார்த்தையாக மாறியுள்ளது.