Don't Miss!
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- News லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் "அதிக முறை" சரித்திரம் படைத்தவர்கள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Lifestyle ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாகுபலிக்கு ஆஸ்கர்... லாபியை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு!
பாகுபலி 2 படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
பாகுபலி முதல் பாகம் ஆஸ்கருக்குப் போகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாகத்துக்கு அந்த நிலை வராத அளவுக்கு வேலைகளைச் செய்கிறது சந்திரபாபு நாயுடு அரசு.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், "பாகுபலி-2 படம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. இந்தப் படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பும்படி மத்திய அரசிடம் நிச்சயமாக சிபாரிசு செய்வேன்.
பாகுபலி-2 படக்குழுவினர் அனைவரையும் தலைநகர் அமராவதிக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தப் போகிறேன். இந்திய சினிமாவை தலை நிமிர வைத்துவிட்டது இந்தப் படம்," என்றார்.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் இந்தியப் படமாக பாகுபலி 2 இருக்கும் என்பது ஓரளவுக்கு இப்போதே உறுதியாகிவிட்டது. மத்திய அரசில் சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கு அந்த அளவுக்கு உள்ளது.