Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இயக்குநர் மிஷ்கின் பெயரில் ஒரு மோசடி... உஷார் மக்களே!
சினிமா திரையில்கூட பார்த்திராத அளவுக்கு பல மோசடிகள் திரையுலகில் நடந்து வருகின்றன.
அப்படி சமீபத்தில் நடந்துள்ள மோசடி, இயக்குநர் மிஷ்கினின் பெயரில் அரங்கேறியுள்ளது. எப்படியாவது சினிமாவில் சேர வேண்டும் என்ற மக்களின் ஆர்வம்தான் இந்த மோசடிக்கு அடிப்படை.
இயக்குநர் மிஷ்கின், தன் புதிய படத்துக்கு நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதற்காக நேர்முகத் தேர்வு நடத்த இருப்பதாகவும், அதனால் விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட தேதியன்று குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறும் 'ஆதி' என்பவரது பெயரையும், அவரது செல்போன் எண்ணையும் ஒரு அரங்கையும் குறிப்பிட்டு வாட்ஸ்அப் செய்தியொன்று பல வாட்ஸ் அப் குரூப்புகளிலும் பரவ, அதை நம்பிய 300க்கும் அதிகமான மக்கள் குறிப்பிட்ட இடத்தில் குவிந்திருக்கின்றனர்.
ஆனால், மிஷ்கினுக்கு தொ டர்புடைய ஆட்கள் யாரும் வராமல், வேறு யாரோ அங்கு வந்து, நேர்முகத் தேர்வுக்கு உள்ளே போக வேண்டுமென்றால் 300 முதல் 500 வரை நுழைவு கட்டணம் தர வேண்டும் என்று சொல்ல, 'ஆஹா, இது அந்தக் கும்பலா' என்று சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினார்களாம் மக்கள்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த வாட்ஸ்அப் செய்தியில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு அடுத்தடுத்து பலரும் போன் செய்ய, 'ஃபேக் நியூஸ்' என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவே பெண்கள் போன் செய்தால் 'சில தவிர்க்க முடியாத காரணத்தால் இன்னைக்கு நடக்க வேண்டியது நடக்கலை... ஆனா கண்டிப்பா உங்க போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்புங்க. ஒரு மாசத்துக்குள்ள உங்களை கூப்பிடுறோம்' என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இதுகுறித்து மிஷ்கினின் உதவியாளர் ஒருவரிடம் கேட்டபோது, "எப்பவுமே புதுசா ஒரு படத்துக்கு நடிக்க ஆட்கள் தேவைன்னா அதை நண்பர்கள் பலரிடமும் கூறி, அவர்கள் மூலம் வருபவர்களை நேரடியாக மிஷ்கினோட ஆபிஸுக்கு வரவழைச்சு அவங்கள போட்டோ எடுத்துட்டு அனுப்புவோம். பிடிச்சிருந்தா ஓகே பண்ணுவோம். இதுதான் நடைமுறை.
ஆனா இதை அப்படியே உல்டாவாக்கி யாரோ வாட்ஸ்ஆப் மூலம் பணம் பண்ணப் பார்த்திருக்கிறார்கள். தயவு செய்து யாரும் இதை நம்பாதீங்க'' என்றார்.
இதேபோலவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர், நடிகர் சசிக்குமாரின் பெயரில் போலியான ஃபேஸ்புக் ஐடியை வைத்துக் கொண்டு, இதேபோல நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தது ஒரு கும்பல் உடனே சசிகுமார் போலீசுக்குப் போக, அந்த போலி கணக்கு முடக்கப்பட்டது.