Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முன்னணித் திரையரங்குகளில் தொடரும் சிக்கல்.. 'தெறி'க்கு வந்த புதிய சோதனை
சென்னை: முன்பதிவில் சாதனை படைத்தாலும் சென்னையின் முக்கியத் திரையரங்குகளில், தெறி படத்தின் வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனக் கூறுகின்றனர்.
விஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் படம் தெறி. தாணு தயாரித்திருக்கும் இப்படம் வருகின்ற தமிழ்ப் புத்தாண்டில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்நிலையில் சென்னையின் முக்கியத் திரையரங்குகளாகக் கருதப்படும் காசி, வெற்றி உட்பட பல்வேறு திரையரங்குகளில், தெறி வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழக அரசு டிக்கெட் விலையை அதிகமாக விற்பனை செய்தால் புகார் அளிக்குமாறு ஒரு எண்ணை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பைக் காரணம் காட்டி, திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பாளர் தாணுவிடம், படத்தின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்துகிறார்களாம்.
ஆனால், தாணு படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் அதற்கு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செங்கல்பட்டு பகுதியிலும் தெறி வெளியீடு இன்னும் உறுதியாகவில்லையாம். சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு முக்கிய பகுதியாகக் கருதப்படுவதால் அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறதாம்.
பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும் பட்சத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு திரையரங்குகள், தெறி வெளியீட்டை நாளை மாலைக்குள் இறுதி செய்துவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.