Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகை ரேவதிக்கு 22ம் தேதி விவாகரத்து
ஆஷா கேளுண்ணி என்ற இயற் பெயர் கொண்டவர் கேரளாவைச் சேர்ந்த ரேவதி. இவரது கணவர் பெயர் சுரேஷ் மேனன். இவர் தயாரிப்பாளராக, இயக்குநராக, கேமராமேனாக இருந்தவர். இருவரும் 1986ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை.
இருவரும் ஆரம்பத்தில் மனமொத்த தம்பதிகளாகவே இருந்தனர். பின்னர் சந்தேகப் புயல் வீசவே இருவரும் ஒரே வீட்டில் தனித் தனியாக வாழ ஆரம்பித்தனர். இருவரையும் சமசரப்படுத்த பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பலன் தரவில்லை.
இந்த நிலையில், பரஸ்பரமாக பிரிந்து செல்வதற்கு இரண்டு பேரும் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சென்னை குடும்பநல கோர்ட்டில் இரண்டு பேரும் சேர்ந்து 1.10.12 அன்று பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விசாரித்தார்.
இரண்டு பேரும் மார்ச் 31-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அன்று ஆஜரானார்கள். பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இரண்டு பேரும் நீதிபதி முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்று அதை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
அன்றைய தினம் இருவருக்கும் விவாகரத்து அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்று தெரிகிறது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!