Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
சென்னை மழை: மக்களின் உணவு, உடை மட்டுமின்றி..சுகாதாரத்திலும் அக்கறை காட்டிய பார்த்திபன்
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் உணவு, உடை மட்டுமின்றி அவர்களின் சுகாதார விசயத்திலும் அக்கறை செலுத்தி வழக்கம்போல மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு நிற்கிறார் நடிகர் பார்த்திபன்.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு பல்வேறு நடிக,நடிகையரும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபனும் தன்னால் முடிந்த உதவிகளை சென்னை மக்களுக்கு வழங்கி வருகிறார். வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளுக்கு ஒரு லாரியில் சென்று இறங்கிய பார்த்திபன் லாரியில் கையோடு கொண்டுசென்ற படகை எடுத்து வெள்ளம் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் சென்றார்.
அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிதண்ணீர், உணவு, போர்வைகள் மற்றும் சேலைகள் ஆகியவற்றை பார்த்திபன் தனது உதவியாளர்களுடன் இணைந்து வழங்கினார்.
மேலும் கையோடு கொண்டு சென்ற பிளீச்சிங் பவுடரை தண்ணீர் அதிகம் தேங்கி நின்ற இடங்களில் தூவி விட்டார். முழங்காலுக்கு மேலே செல்லும் தண்ணீரில் நின்று கொண்டு பார்த்திபன் செய்த இந்த செயல் மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
மழையால் வெளியே வரமுடியாமல் இருந்த மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான குடிதண்ணீர் மற்றும் உணவு ஆகியவற்றையும் பார்த்திபன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.