Don't Miss!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- News பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை! சென்னை ஹைகோர்ட் அதிரடி! சரணடைகிறாரா ராஜேஷ் தாஸ்?
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’... இது பேச்சுலர்ஸ் கதை!
‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை...' - இச்சொற்றொடரின் மகத்துவம் அறிந்தோர் பலர் இருந்தாலும் உணர்ந்தோர் சிலரே. இங்கு உழைக்க தெரிந்தவன் பிழைத்து கொள்வான். இத்தகைய பெருமிதத்தின் நடுவே பெயர் தெரியா ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞர்கள் பலர்.
பேச்சுலர்ஸ் என அழைக்கப்படும் இவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு திரைப்படமாக வருகிறது, "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது"
கரியாம்பட்டி ஸ்டுடியோஸ், ஏடிஎம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது " படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனர் மருதுபாண்டியன்.
பாபி சிம்ஹா, பிரபஞ்சன், லிங்கா, புதுமுகம் சரண்யா நடிக்கும் இப்படத்தை சென்னையின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சில கிராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.
"ரோட்டு கடை இட்லியின் சூட்டால் நாக்கை புண்ணாக்கி கொண்டு, அடி கதவு இல்லா கழிவறை, ஆறுக்கு இரண்டு அளவே கொண்ட ரூம்களின் விஸ்தாரத்தில் கனவு காணும் சென்னையில் வாழ நினைக்கும் பேச்சுலர்ஸ்களின் கதை இது. எனது வாழ்கையில் நடந்த உண்மையான சம்பவங்களின் நகைச்சுவை நிறைந்த கோர்வையே இந்த திரைப்படம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளோம்" என்கிறார் இயக்குனர் மருதுபாண்டியன்.