Don't Miss!
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சி2எச்: இயக்குநர் சேரன், மகள் நிவேதா மீது செக் மோசடி வழக்கு!
இயக்குநர் சேரன் ஆரம்பித்த சி2எச் நிறுவனத்தின் மீது முதல் புகார் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.
‘சி2எச்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சேரன் மகள் நிவேதா பிரியதர்சினி உள்ளார்.
இந்த நிறுவனத்தின் முகவர்களில் ஒருவரான பழ முத்துநாதன் (40), பரமக்குடி, பார்த்திபனூர், முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பகுதிகளில் டிவிடி விற்கும் முகமையைப் பெற்றுள்ளார்.
இதற்காக அவர் ரூ.80 ஆயிரம் டெபாசிட் செலுத்தினாராம். அந்த நிறுவனம் சரியாக செயல்படாததால் கணக்குகளைச் சரிபார்த்து டெபாசிட் தொகையை திரும்பத் தருவதாக சேரனும், அவரது மகளும் ஒப்புக்கொண்டார்களாம்.
இதையடுத்து 27.6.2015 அன்று அந்த தொகைக்காக பழமுத்துநாதனுக்கு காசோலை வழங்கி உள்ளனர். அந்த காசோலையை 4.7.2015ல் அவர் பரமக்குடியில் உள்ள வங்கி ஒன்றில் செலுத்தினாராம். ஆனால் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல் அந்த காசோலை திரும்பி விட்டது.
இதுபற்றி சேரனிடம் கேட்டபோது 4 நாட்கள் கழித்து மீண்டும் அந்த காசோலையை வங்கியில் செலுத்தும்படி கூறியுள்ளார். அதற்குள் தொகையை வங்கியில் செலுத்தி விடுவதாகவும் கூறினாராம். அதன்படி கடந்த 10.7.2015ல் மீண்டும் அந்த காசோலையை பழ முத்துநாதன் வங்கியில் செலுத்தியுள்ளார். அப்போதும் பணம் இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது.
இதுகுறித்து பழ முத்துநாதன் பரமக்குடி நீதிமன்றத்தில் சேரன், அவரது மகள் பிரியதர்சினி ஆகியோர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இன்ப கார்த்திகேயன் இதுதொடர்பாக இயக்குநர் சேரன், அவரது மகள் பிரியதர்சினி ஆகிய 2 பேரையும் வருகிற 30-ந்தேதி பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.