Don't Miss!
- News "ரூம் முழுக்க போட்டோக்கள்" அத்தனையும் ஆபாசம்! பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்! காதலர் தினத்தில் கொடூரம்
- Sports வரம்பு மீறிய ரோகித் ரசிகர்கள்.. அம்பானி குடும்பத்திற்கு தலை குனிவு.. X தளத்திற்கு வந்த சண்டை
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
ஆடு நனையுதேன்னு.... - விஷாலை மறைமுகமாகத் தாக்கிய சேரன்!
விவசாயிகள் பாவமென விவரமில்லாதோர் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என இயக்கநர் சேரன் கூறியுள்ளார்.
வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டி தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில், நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளை போல், தமிழக அரசும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
விஷாலின் இந்த கடிதத்தை இயக்குநர் சேரன் மறைமுகமாக தாக்கியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆடு நனைகிறதென ஓநாய்கள் கவலை கொள்ளும். விவசாயிகள் பாவமென விவரமில்லாதோர் அறிக்கை விடுவார்கள் அவர்களை முதலில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்யச் சொல்லுங்க..," என்று கூறியுள்ளார்.