Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிரஞ்சீவி
ஹைதராபாத்: தன்னுடன் புகைப்படம் எடுக்கவும், நடனமாடவும் ஆசைபட்ட புற்று நோய் பாதித்த சிறுவனின் ஆசையை நடிகர் சிரஞ்சீவி நிறைவேற்றியுள்ளார். அந்த சிறுவனுக்கு தனது 150வது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் சிரஞ்சீவி.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் ஆபேகாம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர்-பத்மா தம்பதி மகன் பாலு பத்து வயதாகும் இந்த சிறுவன், புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
மரணத்தின் வாசலில் இருக்கும் அந்த சிறுவனுக்கு தனது அபிமான நடிகர் சிரஞ்சீவியை பார்க்க வேண்டும் என்பது ஆசை. தனது ஆசையை தொண்டு நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்திருக்கிறான் இந்த சிறுவன்.
இதை அறிந்த நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி, சிறுவன் பாலு சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேற்று வந்து சந்தித்தார்.
சிறுவன் பாலுவுக்கு பழங்கள் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்த சிரஞ்சீவி, ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்ட கயிறை அவன் கையில் கட்டி விரைவில் பூரண குணம் அடைந்து வீடுதிரும்புவாய் என்று ஆசி வழங்கினார்.
சிரஞ்சீவியை நேரில் பார்த்த சிறுவன் பாலு, மகிழ்ச்சியில் அவருடன் ஆடிப்பாட விரும்புவதாக கூறினான். இதை கேட்ட சிரஞ்சீவி, தனது 150வது படத்தில் அவனுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்தார்.
இதை கேட்டு பாலு மகிழ்ச்சி அடைந்தான்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, சிறுவன் பாலு பூரண குணமடைய வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிகளுக்கு பிரபலங்கள் பலர் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!