Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வந்தாளே மகராசி படத்திலேயே ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை சரியாக கணித்த சோ
சென்னை: வந்தாளே மகராசி படத்தில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடித்த சோ அப்போதே அவரை பார்த்து எதிர்காலத்தில் அரசியலில் உனக்கு பெரிய இடம் உண்டு என்று தெரிவித்தார்.
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெய்ஷங்கர், சோ, ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்த படம் வந்தாளே மகராசி. 1973ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஒரு ஜெயலலிதாவுக்கு ஜெய்ஷங்கரும், மற்றொரு ஜெயலலிதாவுக்கு சோவும் ஜோடியாக நடித்தனர்.
சோவின் மனைவியாக நடித்த ஜெயலலிதா உலகமே தெரியாத அப்பாவியாக இருப்பார். தன்னை யார் கொடுமைப்படுத்தினாலும் தாங்கிக் கொள்வார். சோவும், ஜெயாவும் சேர்ந்து அப்பாவித்தனமாக மம்மி மம்மி மாடர்ன் பிரெட் பாடல் எல்லாம் பாடுவார்கள்.
படத்தில் சோ ஜெயலலிதாவை பார்த்து எதிர்காலத்தில் உனக்கு அரசியலில் பெரிய இடம் உள்ளது என்று கூறுவார். அவர் கூறியது போன்றே ஜெயலலிதா தமிழகத்தையே ஆண்டார்.
சோ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து அரசியல் ராஜ தந்திரியாக திகழ்ந்தார்.