Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அமைதியாக நடந்து முடிந்த ஒளிப்பதிவாளர்களுக்கான சிகா தேர்தல்
சென்னை: ஒளிப்பதிவாளர்களுக்கான சிகா தேர்தல் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் இன்று இரவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் தற்போது பதவியில் உள்ளவரான ஜி.சிவா தலைமையில் ‘சேவை அணி', பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலைஅணி', கே.வி.கன்னியப்பன் தலைமையில் 'ஆண்டவர்அணி' என்று 3 அணிகள் போட்டியிடுகின்றன.
ஒளிப்பதிவாளர் சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் 1200. இதில் ஆந்திராவில் 120 பேர், கர்நாடகாவில் 60 பேர், கேரளாவில் 40 பேர் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி சற்று முன் 4 மணியுடன் நடந்து முடிந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று இரவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிகாவில் மொத்தம் 1300 பேர் இருந்தாலும், அதில் 913 பேர் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவரான என்.கே. விஸ்வநாதன் மற்றும் செயலாளர் ஃபெப்சி சிவா ஆகியோர் மீது, ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சிகா தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
3 அணிகளில் வெற்றிவாகை சூடப்போவது எந்த அணி? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.