Don't Miss!
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- News போரூர் பக்கம் போறீங்களா? அப்போ உங்களுக்கு நல்ல செய்தி.. வந்தது சூப்பர் வசதி!
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கவிஞர் தாமரையின் கணவர் எங்கே? பரபரக்கும் மீடியா உலகம்!
கவிஞர் தாமரையும், தோழர் தியாகுவும் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள். இருவருக்குமே முதல் திருமண வாழ்க்கை சரியாக இல்லாத காரணத்தினால் இரண்டாவதாக தியாகுவும், தாமரையும் மணவாழ்க்கையில் ஒன்றாக இணைந்தனர். தங்களுடைய காதலைப் பற்றி கவிஞர் தாமரை பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் திடீரென தியாகு மாயமாகிவிட்டார். தியாகு யாரிடமும் எந்த தகவலும் சொல்லாமல் மாயமாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்களிலும், திரைப்படத்துறை வட்டாரங்களிலும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர் தியாகு. அவரை கடந்த 13 ம் தேதி அன்று அந்த அமைப்பில் இருந்து நிர்வாகிகள் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் கூறும் நிர்வாகிகள், தியாகு எந்த வேலையும் பார்க்காமல் தொலைக்காட்சிகளில் பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கிறார் என்பதே.
அதேசமயம் கொல்லிமலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தியாகு தலைமறைவாகிவிட்டார் என்றும் வதந்திகள் உலா வருகின்றன. ஆனால் கொல்லிமலையைச் சேர்ந்த பெண்ணுக்கும் தியாகுவுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தாமரைதான் தியாகுவை துன்புறுத்தினார் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர். இதில் எது உண்மை என்பதை தியாகுவே நேரில் வந்து கூறினால்தான் உண்டு!