Don't Miss!
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தல 55 படத்தின் க்ளைமாக்ஸ்... அஜீத்துக்கே தெரியாதாம்... ‘ரகசியம்’ காக்கும் மேனன்!
சென்னை: கௌதம்மேனன் இயக்கத்தில் இளமையான தோற்றத்துடன் அஜீத் நடித்து வரும் 55வது படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தற்போதைக்கு அப்படம் தல 55 என்றே குறிப்பிடப் பட்டு வருகிறது.
இப்படத்தில் அஜீத்தின் ஜோடியா திரிஷா மற்றும் அனுஷ்கா என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக நடிக்கும் அஜீத், கருமை நிற முடி, பெப்பர் அண்ட் சால்ட் ஸ்டைல் மற்றும் தாடியுடன் என இப்படத்தில் மூன்று வித தோற்றங்களில் தோன்றுகிறார்.
பொதுவாக முழுக்கதையையும் கூறாமல் தான் ஹீரோக்களை புக் செய்வார் கௌதம்மேனன் எனக் கூறுப்படுவதுண்டு. அதில் அஜீத்தும் தப்பவில்லை. தற்போது அவர் நடித்துவரும் தல 55 படத்தின் க்ளைமாக்ஸை இன்னும் கௌதம்மேனன் அவருக்குச் சொல்லவில்லையாம்.
இது குறித்து ஆனந்தவிகடனுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார் இயக்குநர் கௌதம்மேனன். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வித்தியாசமான ஸ்கிரிப்ட் வொர்க்...
முழுக்கதையும் சொல்லாமத்தான் அஜீத்தை இந்தப் படத்துல கமிட் பண்ணினேன். என் ஸ்கிரிப்ட்வொர்க் கொஞ்சம் வித்தியாசமானது.
க்ளைமாக்ஸ் பிக்ஸ் பண்ணமாட்டேன்...
மின்னலே தொடங்கி நீதானே என் பொன்வசந்தம் படம் வரைக்கும் ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிச்சிருவேன். ஆனா, க்ளைமாக்ஸ் மட்டும் ஃபிக்ஸ் பண்ணிக்கமாட்டேன்.
பைனலா ஒரு க்ள்ஐமாக்ஸ்...
ஷூட்டிங் போயிருவோம். ஆனா, க்ளைமாக்ஸ் நினைப்பு மனசுல ஓடிட்டே இருக்கும். ஷூட்டிங் போகப் போக ஆர்ட்டிஸ்சின் ஈடுபாடு, காட்சிகளின் மேக்கிங் எல்லாம் சேர்த்து ஒரு க்ளைமாக்ஸை மனசுல ஃபிக்ஸ் பண்ணும்.
ஒரே பார்முலா தான்...
அதை கடைசியா ஷூட் பண்ணுவேன். காக்க காக்க, வாரணம் ஆயிரம் என என் எல்லா படங்களுக்கும் இந்த பார்முலா தான்.
அஜீத்துக்கும் அப்டி தான்...
அப்படி அஜீத் சாருக்கும் இந்தப் பட க்ளைமாக்ஸ் இன்னும் தெரியாது. அது இல்லாமல் தான் அவருக்கு கதை சொன்னேன்.
ஷூட்டிங் போய்டலாம்...
முதல் பாதி சூப்பர். இரண்டாவது பாதி அரைமணி நேரமும் பிரமாதம். ஷூட்டிங் போயிடலாம்னு படத்துக்குள்ள வந்துட்டார்.
சீக்கிரமா சொல்லணும்...
‘ஜி... இன்னும் நீஙக் க்ளைமாக்ஸ் சொல்லலை. அவ்வளவு ரகசியமா வெச்சிருக்கீங்களா?'னு இப்பக் கூட அஜீத் சார் கேட்டார். சீக்கிரம் அவர்கிட்ட க்ளைமாக்ஸ் சொல்லணும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.