Don't Miss!
- Finance 1 கிலோ காளான் ரூ. 1.5 லட்சமா.. சமைச்ச வீடே மணக்கும்..என்னனு பாருங்க!
- Technology Vodafone-க்கு கும்பிடு.. மொத்தமா முடிச்சு விட்டாச்சு.. ஒரே திட்டம்தான்.. டேட்டா, கால்களுக்கு லிமிட் இல்ல!
- Lifestyle காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- News தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு... இப்படியும் 20 கட்சிகள் களத்தில் இருப்பது தெரியுமா?
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பாகுபலி கதை எம்ஜிஆரின் அடிமைப்பெண் சாயலில் இருப்பது பெருமைதானே!- பிரபாஸ்
பாகுபலி படத்தின் கதை, அமரர் எம்ஜிஆரின் அடிமைப்பெண் சாயலில் இருப்பதை பெருமையாகக் கருதுகிறோம் என்றார் பாகுபலி நாயகன் பிரபாஸ்.
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பெரும் வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களை அழைத்து பகிர்ந்து கொண்டனர் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமிழில் வெளியிட்ட ஞானவேல் ராஜா ஆகியோர்.
அப்போது பாகுபலி படத்தின் கதை அப்படியே எம்ஜிஆரின் அடிமைப்பெண் கதை போலவே உள்ளதே? அடிமைப் பெண் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று பிரபாஸிடம் கேட்கப்பட்டது.
அடிமைப் பெண் படத்தைப் பார்க்கவில்லை என்று பிரபாஸ் கூறினார்.
பக்கத்திலிருந்த ரம்யா கிருஷ்ணனிடம் கேட்டபோது, அடிமைப் பெண் படத்தைத் தான் பார்த்திருப்பதாகவும், பாகுபலி கதை அந்த சாயலில் இருந்ததை உணர்ந்ததாகவும் கூறினார்.
பின்னர் பிரபாஸ் பேசுகையில், "எம்ஜிஆர் மிகப் பெரிய சாதனையாளர். பாகுபலி கதை அவரது அடிமைப் பெண் சாயலில் அமைந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறோம்," என்றார்.