Don't Miss!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாலிசியை விட்டுக் கொடுக்காத நயன்தாரா... கொந்தளிக்கும வெங்கடேஷ்!
சென்னை: தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் நடிகை நயன்தாரா மீது புகார் கூறப்பட்டுள்ளது.
நடிகர் வெங்கடேஷ்- நயன்தாரா இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவே இந்தப் புகார் கூறப்பட்டுள்ளது.
டாப் நடிகை
நயன்தாரா, தமிழ், தெலுங்கு பட உலகில் டாப் நடிகை. கடந்த ஆண்டு அவர் நடித்த அத்தனைப் படங்களும் ஹிட். இந்த ஆண்டு அவர் நடிப்பில் இது நம்ம ஆளு, மலையாளத்தில் புதிய நியமம் ஆகிய படங்கள் வெளியாகி, அவருக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளன. அடுத்து ஜீவா ஜோடியாக நடித்த திருநாள் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இருமுகன், காஸ்மோரா, டோரா ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.
மோதல்
தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக ‘பாபு பங்காராம்' என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் வெங்கடேசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மறுப்பு
இந்த படத்தில் நயன்தாரா, வெங்கடேஷ் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இந்த பாடல் காட்சியில் நடிக்கும்படி நயன்தாராவை அழைத்தனர். ஆனால் ஏற்கனவே அளித்த கால்ஷீட்டுகளை படக்குழுவினர் விரயம் செய்து விட்டதாக கூறி அதில் நடிக்க மறுத்து விட்டார். நயன்தாராவின் பிடிவாதத்தால் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழுவினர் குற்றம் சாட்டினர். வேறு வழியின்றி பாடல் காட்சியை படமாக்காமலேயே படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
அதெல்லாம் முடியாது
இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ளுமாறு நயன்தாராவை அழைத்தனர். ஆனால் அந்த விழாவிலும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டார். இதுபோன்ற விழாக்களில் பங்கேற்க மாட்டேன் என்பதை படம் ஆரம்பிக்கும்போதே நயன்தாரா சொல்லிவிடுவார். இந்தப் படத்திலும் தன் பாலிசியை விட்டுத் தரவில்லை.
புகார்
நயன்தாராவின் நடவடிக்கைகள் வெங்கடேசுக்கும் படக்குழுவினருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தின. அவர் மீது தெலுங்கு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் புகார் அளித்துள்ளனர்.
இரண்டாவது முறை
நயன்தாரா மீது ஏற்கெனவே இதே காரணங்களுக்காக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஒரு ஆண்டு காலம் தெலுங்கு சினிமாவில் அவர் நடிக்க தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.