Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சொத்து வரி பாக்கி: நயன்தாரா, ஜெயராம் வீடுகளுக்கு ஜப்தி நோட்டீஸ்
ஊட்டி: சொத்து வரி பாக்கி காரணமாக நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராம் ஆகியோர் வீடுகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஊட்டி, லவ்டேல் சாலையில், 'ராயல் காஸ்டில்' என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 142 வீடுகள் உள்ளன. இதில், சில குடியிருப்புகளின் உரிமையாளர்கள், நகராட்சிக்கு சொத்துவரி பாக்கி வைத்துள்ளதால் நேற்று நகராட்சி வருவாய் அலுவலர் ஷாஜகான், உதவி வருவாய் அலுவலர் நந்தகுமார் மற்றும் அலுவலர்கள் சொத்துவரி செலுத்தாதவர்களின் வீடுகளில், 'ஜப்தி நோட்டீஸ்' ஒட்டினர்.
நகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டியில் வீடுகளை வாங்கியுள்ள சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பெரிய செல்வந்தர்கள் பலர், சொத்து வரி பாக்கி வைத்துள்ளனர். இதனால், நகராட்சி 100-சதவீத வரி வசூலை எட்ட முடியாத நிலை ஏற்படுகிறது' என்றனர்.
மேலும், நகராட்சி கமிஷனர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'ராயல் காஸ்டில்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர் ஜெயராம், பிரபல நடிகை நயன்தாரா மற்றும் பல தொழிலதிபர்களின் பெயரில் உள்ள வீடுகளுக்கு சொத்து வரி நிலுவையில் உள்ளன.
ஏற்கனவே, சொத்து வரியை செலுத்த வலியுறுத்தி, நாங்கள் ஒட்டிய நோட்டீசை, குடியிருப்பு பராமரிப்பாளர்கள் கிழித்துவிட்டதால், தற்போது, 'ஸ்டென்சில்' கட்டிங் மூலம், 'ஜப்தி நோட்டீஸ்' ஒட்டியுள்ளோம். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், அவர்கள், வரி செலுத்தாவிட்டால், அந்த வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும், மேலும் 'ஜப்தி' நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.