Don't Miss!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Finance மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - வைப்புநிதி திட்டம்: எதில் அதிக வரி சலுகை பெற முடியும்?
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
சசிகுமாருக்கு கதை சொல்ல ஒரு வருடம் காத்திருந்த புது இயக்குநர்!
இன்றைக்கு முன்னணி நடிகர்கள் மட்டுமல்ல, அதற்கு அடுத்த நிலையில் உள்ள நடிகர்-நடிகைகளுக்கு கதை சொல்லக் கூட மாதக் கணக்கில் அலைய வேண்டும். சில ஹீரோக்களின் கால்ஷீட் பெற அவர்களுடன் ஆண்டுக்கணக்கில் அலைந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதற்கு காரணம் என்று தேடிப் போனால்.. அது ஒரு பெரிய அலுப்புக் கதையாகிவிடும்.
விஷயத்துக்கு வருவோம்... இயக்குநர் - நடிகர் சசிகுமாருக்காகவே ஒரு கதையை எழுதி வைத்துவிட்டு ஒரு ஆண்டுகள், அந்தக் கதையை அவரிடம் சொல்ல முடியாமல் காத்திருந்திருக்கிறார் ஒரு இயக்குநர். அவர் வசந்தமணி. டிபி கஜேந்திரனிடம் துணை இயக்குநர், ஜில்லாவில் நேசனுடன் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
சசிகுமாரை வைத்து இப்போது வெற்றிவேல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ், ஆர். ரவிந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 500-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்தவர் ரவீந்திரன். தயாரிப்பாளராக அவருக்கும் இது முதல் படம்.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா மற்றும் இளவரசு நடிக்கின்றனர். மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷா என முன்று கதாநாயகிகள்.
இயக்குநர் வசந்தமணியிடம் பேசினோம்.
"காதலையும் குடும்பத்தையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்தும் உண்டு.
இந்தப் படத்தின் கதையை சசிகுமாரை மனதில் வைத்துதான் எழுதினேன். ஆனால் அவரிடம் நேரில் சொல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை. யார் யார் மூலமோ சொல்லியும் அவர்கள் சசிகுமாரிடம் விஷயத்தைச் சொல்லவே இல்லை. ஒரு ஆண்டு கழித்து யதேச்சையாக அவரைச் சந்தித்து சொன்னேன். நல்ல கதை. ஏன் இத்தனை நாள் காத்திருந்தீர்கள்? உடனே ஆரம்பிக்கலாமே என்றார்.
தாரை தப்பட்டை முடிந்த கையோடு இந்தப் படத்தை ஆரம்பித்தோம். 70 நாட்களில் முடித்துவிட்டோம்.
சசிகுமார் மிக அருமையான மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து இயக்கியதற்காக இதைச் சொல்லவில்லை. தான் ஒரு இயக்குநர் என்றாலும் என் சுதந்திரம் இம்மி அளவுக்கும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார்," என்றார்.