Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சசிகுமாருக்கு கதை சொல்ல ஒரு வருடம் காத்திருந்த புது இயக்குநர்!
இன்றைக்கு முன்னணி நடிகர்கள் மட்டுமல்ல, அதற்கு அடுத்த நிலையில் உள்ள நடிகர்-நடிகைகளுக்கு கதை சொல்லக் கூட மாதக் கணக்கில் அலைய வேண்டும். சில ஹீரோக்களின் கால்ஷீட் பெற அவர்களுடன் ஆண்டுக்கணக்கில் அலைந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதற்கு காரணம் என்று தேடிப் போனால்.. அது ஒரு பெரிய அலுப்புக் கதையாகிவிடும்.
விஷயத்துக்கு வருவோம்... இயக்குநர் - நடிகர் சசிகுமாருக்காகவே ஒரு கதையை எழுதி வைத்துவிட்டு ஒரு ஆண்டுகள், அந்தக் கதையை அவரிடம் சொல்ல முடியாமல் காத்திருந்திருக்கிறார் ஒரு இயக்குநர். அவர் வசந்தமணி. டிபி கஜேந்திரனிடம் துணை இயக்குநர், ஜில்லாவில் நேசனுடன் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
சசிகுமாரை வைத்து இப்போது வெற்றிவேல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ், ஆர். ரவிந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 500-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்தவர் ரவீந்திரன். தயாரிப்பாளராக அவருக்கும் இது முதல் படம்.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா மற்றும் இளவரசு நடிக்கின்றனர். மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷா என முன்று கதாநாயகிகள்.
இயக்குநர் வசந்தமணியிடம் பேசினோம்.
"காதலையும் குடும்பத்தையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்தும் உண்டு.
இந்தப் படத்தின் கதையை சசிகுமாரை மனதில் வைத்துதான் எழுதினேன். ஆனால் அவரிடம் நேரில் சொல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை. யார் யார் மூலமோ சொல்லியும் அவர்கள் சசிகுமாரிடம் விஷயத்தைச் சொல்லவே இல்லை. ஒரு ஆண்டு கழித்து யதேச்சையாக அவரைச் சந்தித்து சொன்னேன். நல்ல கதை. ஏன் இத்தனை நாள் காத்திருந்தீர்கள்? உடனே ஆரம்பிக்கலாமே என்றார்.
தாரை தப்பட்டை முடிந்த கையோடு இந்தப் படத்தை ஆரம்பித்தோம். 70 நாட்களில் முடித்துவிட்டோம்.
சசிகுமார் மிக அருமையான மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து இயக்கியதற்காக இதைச் சொல்லவில்லை. தான் ஒரு இயக்குநர் என்றாலும் என் சுதந்திரம் இம்மி அளவுக்கும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார்," என்றார்.