Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டிமாண்டி காலனி படத்தின் கதை என்ன?
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு காலனியில் பல வருடங்களாக பேய் இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இதனை மையமாக வைத்து டிமாண்டி காலனி படத்தை உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அஜய் ஞானதாஸ்.
நடிகர் அருள்நிதி மற்றும் அவரது நண்பர்கள் டிமாண்டி காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வரும் போது அங்கு நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
சிங்கம் புலி,மதுமிதா, சூது கவ்வும் ரமேஷ் திலக், சனத் மற்றும் அபிஷேக் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஹீரோயின் கிடையாது.
சிரிப்பு பேய் இல்ல சீரியஸ் பேய்
இப்போது வரும் அனைத்து பேய் படங்களும் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் வேளையில் இந்தப் படம் சீரியஸ் பேய் படமாம்.
யாவரும் நலம்,ஈரம் வரிசையில்
மாதவன் நடித்த யாவரும் நலம் ஆதி நடித்த ஈரம் படங்கள் போல இந்தப் படம் செம திகில் படமாக இருக்குமாம்.
பேயாக மாறும் ஹீரோ
பேய்களின் அட்டகாசத்தால் பாதிக்கப் படும் அருள்நிதி ஒரு கட்டத்தில் பேயாக மாறி எல்லோரையும் பயமுறுத்த அதற்கு பின் என்ன என்பது கிளைமாக்ஸ்.
இசையமைப்பாளர்கள்
இசையமைப்பாளர் கெபா ஜெரிமியா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் டம்மி பீசு பாடலை இசையமைப்பாளர் டி.இமானும், வாடா வா மச்சி பாடலை கொலைவெறி புகழ் அனிருத்தும் பாடியுள்ளனர்.
ஜெயிப்பாரா
அருள்நிதி பேயாக சாரி ஹீரோவாக ஜெயிப்பாரா ..முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்..