Don't Miss!
- News அதிமுக வேண்டாம்? பாமக முடிவுக்கு என்ன காரணம்? மொத்த டேட்டா இதோ!
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
“பவர் பாண்டி”... ராஜ்கிரணை நாயகனாக்கி இயக்குநராகிறார் தனுஷ்.. இன்று முதல் ஷூட்டிங்! #rajkiran
சென்னை: ராஜ்கிரணை நாயகனாக்கி 'பவர் பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்.
நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பன்முகத் திறமையாளராக வெற்றிகரமாக பயணித்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக இவர் இயக்குநராகவும் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
தற்போது இந்தத் தகவல் நிஜமாகியிருக்கிறது.
|
பவர் பாண்டி...
ராஜ்கிரணை நாயகனாக நடிக்க வைத்து தனது முதல் படத்தை இயக்குகிறார் தனுஷ். அப்படத்திற்கு ‘பவர் பாண்டி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஷூட்டிங்...
இப்படத்தினை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
25 ஆண்டுகள்...
ராஜ்கிரண் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 25வது ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த ஆண்டில் அவர் தனுஷ் இயக்கத்தில் நாயகனாக நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரசன்னா...
இப்படத்தில் ராஜ்கிரணின் மகனாக பிரசன்னா நடிக்கிறார். இவர் தவிர மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
சுவாரஸ்யத்தகவல்...
தனுஷ் தான் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரணை நாயகனாக்கி இருப்பதில் மற்றொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. அதாவது 25 ஆண்டுகளுக்கு முன் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மூலமாக 'என் ராசாவின் மனசிலே' படத்தில் தான் ராஜ்கிரண் அறிமுகமானார். அந்தப் படம் தான் கஸ்தூரிராஜாவிற்கும் முதல் படம் ஆகும்.
சென்டிமெண்ட்...
பெரும் வெற்றியைப் படைத்தது அப்படம். எனவே, சென்டிமெண்டாக தனுஷும் தனது முதல் படத்தில் ராஜ்கிரணை நாயகனாக்கி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தப் படத்தில் தனுஷும் நடிப்பாரா என்பது குறித்து தகவல்கள் இல்லை.
வாழ்த்துக்கள்...
ஆனால், நடிப்பின் ஊடே இனி இயக்கத்திலும் ஈடுபட தனுஷ் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் தனுஷ், இயக்குநராகவும் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.