Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரவுடிகளை அனுப்பி நடிகை நிகிதாவை தாக்க முயன்ற மனைவி... மன்னிப்பு கேட்ட தர்ஷன்!
கணவனுடன் கள்ளத் தொடர்பு உள்ளதாக நினைத்து நடிகர் தர்ஷனின் மனைவி ரவுடிகளை அனுப்பி தன்னை மிரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார் கன்னட - தமிழ் நடிகை நிகிதா.
தமிழில் சக்ரபதி, குறும்பு, சரோஜா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிகிதா. கன்னடத்தில் முன்னணி நடிகை.
நிகிதாவுக்கும் கன்னட நடிகர் தர்ஷனுக்கும் இடையே கள்ள தொடர்பு இருப்பதாக, தர்ஷன் மனைவி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதும், இதனால் கன்னட தயாரிப்பாளர் சங்கம் நிகிதாவுக்கு படங்களில் நடிக்க தடை விதித்ததும் நினைவிருக்கலாம்.
இந்த பிரச்சினையை ராஜ்குமார் மனைவி பர்வதம்மாள்தான் பஞ்சாயத்துப் பண்ணி தீர்த்து வைத்தார். நிகிதாவிடம் தயாரிப்பாளர் சங்கம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.
இந்த சர்ச்சைகளிலிருந்து மீண்டு வந்து படங்களில் பிஸியாகிவிட்டார் நிகிதா. திரும்பவும் கைநிறைய வாய்ப்புகள் வந்துள்ளது குறித்து அவர் கூறுகையில், "கன்னட நடிகர் தர்ஷன் என்னோடு நடித்தபோது, அவருக்கும் அவர் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், எனவே மனைவியை பிரிந்து விட்டதாகவும் கூறினார். மனைவியை விவாகரத்து செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.
நடிகரின் மனைவி எனக்கும் அவரது கணவருக்கும் தகாத உறவு இருப்பதாக கருதி ரவுடிகளை என் வீட்டுக்கு அனுப்பி மிரட்டினார்.
என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. எதிர்த்து போராடினேன். தற்போது தர்ஷன் என்னிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் படங்களில் நடிப்பது சந்தோஷமாக உள்ளது," என்றார்.