Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முதல் நாளே 10 கோடியை வசூல் செய்தது "தில் தடக்னே தோ"
மும்பை: பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா, நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் நடிப்பில் கடந்த வெள்ளிகிழமை வெளியான தில் தடக்னே தோ திரைப்படம் ரிலீசான முதல் நாளே சுமார் 10.53 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைதுள்ளது.
இயக்குநர் சோயப் அக்தரின் கைவண்ணத்தில் வெளிவந்த இப்படம் இந்த ஆண்டின் இரண்டாவது மிகப் பெரிய ஓபனிங் படமாக அமைந்துள்ளது.
அக்சய் குமார் நடிப்பில் வெளிவந்த கப்பர் இஸ் பேக் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஓபனிங் படமாக பாலிவுட்டில் அமைந்தது. படம் வெளியான முதல் நாளே 13 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது. அதற்கு அடுத்த இடத்தில் தில் தடக்னே தோ திரைப்படம் 1 கோடி ரூபாயை குறைவாக வசூல் செய்தது இரண்டாம் இடத்தில் உள்ளது.
குடும்ப பின்னணி மற்றும் செண்டிமெண்ட், காதல் என எல்லாம் கலந்த கலவையாக அமைந்த இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து உள்ளது. 85 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் முதல் நாளே 10.53 கோடியை வசூல் செய்திருக்கிறது.
வார இறுதி நாட்களான நேற்று மற்றும் இன்று இந்தப் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இந்தித் திரையுலகில் அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் இந்த வருடத்தின் 100 கோடி வசூல் செய்த படங்களில் தில் தடக்னே தோ வும் இடம்பெறலாம்.