Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் போதைப்பொருளுக்கு அடிமையா, நீங்க பார்த்தீங்க?: பிரபல நடிகர் கோபம்
திருவனந்தபுரம்: நான் போதைப்பொருளுக்கு அடிமை என்று பொய்யான செய்தி பரப்பியவர்கள் மீது சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளிப்பேன் என்று நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் திலீப் தற்போது தனது மனைவி காவ்யா மாதவனுடன் அமெரிக்காவில் உள்ளார். இருவரும் சேர்ந்து அமெரிக்காவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு காவ்யா கலந்து கொள்ளும் முதல் மேடை நிகழ்ச்சி.
காவ்யா
முன்னாள் மனைவி மஞ்சு வாரியரை போன்றே திருமணத்திற்கு பிறகு காவ்யாவையும் திலீப் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவில் நடந்து வரும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
போதை
திலீப் அமெரிக்காவில் இருக்கும் இந்த நேரத்தில் அவரை பற்றி ஏகப்பட்ட செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. அதில் ஒன்று அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டது என்ற செய்தி.
திலீப்
தான் ஊரில் இல்லாத நேரத்தில் தன்னைப் பற்றி பரவிய செய்தி திலீப்புக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.
வழக்கு
என் வாழ்க்கை பற்றியும், என்னை பற்றியும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிப்பேன் என்று திலீப் கூறியுள்ளாராம்.