Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இதுவரை 15 முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்!! - திலீப், காவ்யா மாதவன்
இதுவரை எங்களுக்கு 15 முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் மீடியாவில் என நடிகர் திலீப்பும், காவ்யா மாதவனும் தெரிவித்துள்ளனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். பிரபல நடிகை மஞ்சு வாரியரை காதல் திருமணம் செய்தார். இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தனர் இருவரும்.
காவ்யாதான் காரணமா?
இந்த விவாகரத்துக்கு காரணம் நடிகை காவ்யா மாதவனுடன் நடிகர் திலீப்புக்கு ஏற்பட்ட தொடர்புதான் என்றும், இருவரும் சேர்ந்தே இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர்.
திருமணம்
இந்தநிலையில் காவ்யா மாதவனை வருகிற 16-ந்தேதி குருவாயூர் கோவிலில் வைத்து நடிகர் திலீப் திருமணம் செய்ய இருக்கிறார் தகவல் பரவியது.
இந்த முறையும் தனது மறுப்பை திலீப் தெரிவித்துள்ளார்.
15 முறை
அவர் கூறுகையில், "கடந்த ஓராண்டில் மட்டும் 15 முறை எனக்கும் காவ்யா மாதவனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் மீடியாவில். எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றினால், அதை நானே உங்களுக்கு தெரிவிப்பேன். இப்போது வெளியாகி இருக்கும் தகவல் புரளி. அதில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.
புரளி
இதுகுறித்து காவ்யா மாதவன் கூறுகையில், " இந்த தகவலில் உண்மை இல்லை. அது வெறும் புரளி. எனது வாழ்க்கையில் ஏதாவது நல்ல தருணங்கள் ஏற்பட்டால் அதை நானே உங்களுக்கு தெரிவிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுங்கள்," என்றார்.