Don't Miss!
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
தனுஷை இயக்குவதை விட அவருடன் வேலை பார்ப்பது நல்ல அனுபவம் -ஒளிபதிவாளர் வேல்ராஜ்
தனுஷை ஒரு நடிகனாக இயக்குவதை விடவும் அவரிடம் ஒளிப்பதிவாளராக வேலை பார்ப்பது நல்ல அனுபவமாக உள்ளது என ஒளிபதிவாளர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
சென்னை: பவர்பாண்டி திரைப்படத்தை தனுஷ் இயக்கியுள்ள காரணத்தால், அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது. அப்படத்தின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் தனுஷ் குறித்துக் கூறும்போது தனுஷை இயக்குவதை விட அவருடன் சேர்ந்து வேலை பார்ப்பதே நல்ல அனுபவம் என்று கூறியுள்ளார்.
ஒளிபதிவாளர் வேல்ராஜ், தனுஷை நாயகனாக வைத்து வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய இரு படங்களை இயக்கினார். தற்போது தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தின் ஒளிபதிவாளர் வேல்ராஜ், தனுஷ், பவர் பாண்டி படம், ராஜ்கிரண் குறித்து பேசினார்.
தனுஷை ஒரு நடிகராக வைத்து இயக்குவதை விட, அவரிடம் ஒரு சினிமாட்டோகிராபராக வேலைபார்ப்பதுதான் பிடித்திருக்கிறது. காரணம் பவர் பாண்டி படத்தில் அவர் நடிகர்களிடம் தன்மையாக நடந்துகொண்டதைக் கண்டு, அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.
அதேபோல், இந்தப் படத்தில் என் விருப்பம் போல் வேலை செய்ய அனுமதித்தார். சென்னை, ராமநாதபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஷூட் செய்தோம். அதில் சாலைகளில் படம்பிடித்தது அதிகம் பேசப்படும்.
ராஜ்கிரண் ஆன்மீகத்தில் அதிக பற்றுடையவர் என்பதாலும் சீனியர் என்பதாலும் அவரை வீட்டில் ஒரு பெரியவர் போலவே மதித்தேன் என வேல்ராஜ் கூறினார்.