Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நல்ல மனிதனுக்கு உதாரணம் விஜய்!- இயக்குநர் மகேந்திரன்
மக்கள் மனதில் என்றும் வாழும் படங்களைத் தந்த இயக்குநர் மகேந்திரன். முதல் முறையாக விஜய்யின் தெறி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில், அசப்பில் கபாலி ரஜினி மாதிரி காட்சி தரும் மகேந்திரன், தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசினார்.
அவர் கூறுகையில், "என்னுடைய வாழ்க்கையே மிகவும் திருப்புமுனை நிறைந்தது. நான் சினிமாவுக்கு வந்தது, இயக்குநரானதெல்லாம் எதிர்ப்பாராத திருப்பு முனைகள்.
இந்த வயதில் நான் விஜய் படத்தில் நடிப்பேன் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
கடவுள் மிகவும் அற்புதமானவர். தாணு இப்படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது, நீங்கள் உங்க படத்துல உலகத்தை காட்டினீங்க. நான் இந்த உலகத்துல உங்கள நடிகனா காட்ட ஆசைப்படுறேன்னு சொன்னார்.
எனக்கு நடிக்க வரும்னு எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் தாணு சாருக்காக நடித்தேன். விஜய்யும் நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக அவர் கூறினார். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது.
நல்ல மனிதனுக்கு ஒரு எடுத்துக்காட்டு விஜய். விஜய் எவ்வளவுதான் உயரத்திற்கு சென்றாலும், ரொம்பவும் அமைதியான நபர். தன் நிலை மாறாதவர்," என்றார்.