Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த 'காதல்' இந்த சமூகத்தை சும்மா விடாது...!- இயக்குநர் பா .ரஞ்சித்
'காதல்' இந்த சமூகத்தை மாற்றியே தீரும். சமூகத்தில் காதலால் மட்டுமே புரட்சியை உண்டு பண்ண முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு என்று இயக்குநர் பா ரஞ்சித் பேசினார்.
'காதல்' இந்த சமூகத்தை மாற்றியே தீரும். சமூகத்தில் காதலால் மட்டுமே புரட்சியை உண்டு பண்ண முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு என்று இயக்குநர் பா ரஞ்சித் பேசினார்.
சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்ணு விஷால், பார்த்திபன், ஸ்ரீ திவ்யா நடித்துள்ள படம் மாவீரன் கிட்டு. ஐஸ்வர் சந்திர சாமி, டிஎன் தாய் சரவணன் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பா ரஞ்சித் பேசுகையில், "பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமங்கள் என்னவாக இருக்கின்றன, கிராமங்களின் தெருக்கள் என்னவாக இருக்கின்றன... கிராமங்களில் வாழும் மக்கள், எப்படிப்பட்ட அடையாளமாக இருக்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்குள் ஒரு கேள்வி இருந்து வந்தது. முதன் முதலாக வெண்ணிலா கபடிக்குழு படம் பார்த்தபோது கிராமங்களில் இருக்கக் கூடிய அரசியல், அதுவும் விளையாட்டில் இருக்கும் அரசியலை மிக அழகாக ஒரு வணிகசினிமாவில் காட்சி படுத்தியிருந்தார் சுசீந்திரன்.
அதே போல இன்றைய கிராமங்களில் பொதுப் பயன்பாட்டிற்குள் இருக்கிற அரசு பொதுவுடைமை என்னவாயிருக்கிறது, யாருடைய சொந்தமாயிருக்கிறது என்கிற ஒரு கேள்வியிருக்கிறது. அந்தக் கேள்விக்கு இந்தப்படம் நிச்சயமாக ஒரு பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன் .
இந்தப் படத்தில் வரும் டிரெயிலரும், பாடல்களும் அதைத்தான் திருப்பித் திருப்பி சொல்கின்றன. இந்த 'காதல்' இருக்கிறதே அது சும்மாயிருக்காது. 'மாவீரன் கிட்டு' படத்தில் வரும் இந்த வசனம் கண்டிப்பாக சலசலப்பை உண்டுபண்ணும். 'காதல்' இந்த சமூகத்தை மாற்றியே தீரும். சமூகத்தில் காதலால் மட்டுமே புரட்சியை உண்டு பண்ண முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு .
அந்த வகையில் சுசீந்திரன், யுகபாரதி, இமான் கூட்டணியில் உருவாகும் இந்தப்படம் சமூகத்துக்கான நல்ல கருத்துக்களை பேசக்கூடிய படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தமாதிரியான படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெற்றால் மட்டுமே தொடர்ந்து இந்தமாதிரியான படங்கள் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கை கலைஞர்களுக்கு ஏற்படும். தயாரிப்பாளர்களும் தயாரிக்க முன்வருவார்கள். தமிழ் ரசிகர்கள் எந்தப்படத்தையும் தரம்பிரித்துப் பார்ப்பதில்லை. இந்தப்படம் கமர்சியல் ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார்.