Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நிஜத்திலும் ரஜினியின் வார்த்தைகள் மந்திரம்தான்!- ஒரு இயக்குநரின் அனுபவம்
ரஜினி சாதாரணமாக திரையில் பேசும் வார்த்தைகள் கூட பன்ச் வசனங்களாக மாறி பல்லாண்டுகள் நிலைத்து நிற்கின்றன.
ரஜினி என்னும் மனிதருக்குள்ள காந்த சக்தியின் அற்புதம் அது... திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ரஜினி வார்த்தைகள் மந்திரம் தான், அவரது குருநாதருக்கு கூட.
இதை எடுத்துக்காட்டும் வகையில் ரஜினியின் குருநாதரான இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சிஷ்யர் தாமிரா @Thamira Kathar Mohideen ஒரு பாலசந்தரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை முகநூலில் பகிர்ந்துள்ளார்...
"எங்கள் இயக்குநர் மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு மெல்ல மெல்ல நினைவுகள் தப்பிக்கொண்டிருக்கிறது. வெளியே வதந்திகள் அவரைக் கொன்று இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் உறுபசியோடு மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கின்றன. மருத்துவமனை உள்ளே உறவுகளும் சுற்றமும் கையறு நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். கண்ணீர்தான் எல்லோருக்குமான பொது மொழியாக இருக்கிறது. மருத்துவர்களின் மௌனம் அச்சுறுத்துகிறது.
குறைந்தபட்சம் ஒரு உயிர் தவித்துக்கொண்டிருக்கும் போதே இரங்கல் தெரிவிக்கும் சமூக ஊடகங்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டுமென எண்ணுகிறோம். சமூக ஊடகங்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டுமென எண்ணுகிறோம். அவர் இழுத்து விடும் மூச்சும் அலை பாயும் அவரது கண்களும் எல்லோரையும் உறை நிலையில் வைத்திருக்கிறது.
மரண அமைதியும் கண்ணீருமாக இருந்தது அந்த அறை. அப்போதுதான் தனது இயல்பான வேகத்தோடும் பரபரப்போடும் வந்தார் ரஜினிகாந்த். இயக்குநரின் கைகளை அழுந்தப் பற்றியபடி 'சார் நா ரஜினி வந்திருக்கறேன்.. உங்கரஜினி வந்திருக்கறேன்' என்று சொன்ன கணத்தில் விடைபெற்றுக்கொண்டிருந்த அந்த உயிர் அவரது கண்களில் ஒரு பேரொளியாய் ஒன்று திரண்டது. கை விரல்கள் நடுங்க இன்னும் இறுக்கமாக ரஜினியின் கைகளைப் பற்றிக் கொள்கிறார். உதடுகள் குவித்து ஏதேதோ சொல்ல முயற்சிக்கிறார். ஒரு குழந்தையைப் போல அவரது பார்வை இருக்கிறது.
மெல்ல இயக்குநரை தடவிக் கொடுத்து 'ஒண்ணுமில்ல சார்... உங்களுக்கு ஒண்ணும் ஆகாது...' என்று சொன்னார் ரஜினி.
அது ஒரு மந்திரச் சொல் போலவே இருந்தது. அதன் பின் இரண்டு நாளைக்குப் பிறகே இயக்குநர் இயற்கையெய்தினார்.
ரஜினி பற்றி இயக்குநர் பல முறை நெகிழ்வாக பேசக் கேட்டிருக்கிறேன். அன்றுதான் அவர்கள் இருவருக்குமான நுட்பமான அன்பை உணர்ந்தேன்."
* இயக்குநர் தாமிரா பாரதிராஜா, கே பாலச்சந்தர் நடித்த இரட்டைச் சுழி படத்தை இயக்கியவர்.