Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இயக்குனர்கள் என்னை காமெடி பீஸாகவே பார்க்க விரும்புறாங்கபா... மொட்டை ராஜேந்திரன்
சென்னை: இயக்குனர்கள் தன்னை நகைச்சுவை நடிகராகவே பார்க்க விரும்புவதாக மொட்டை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே திரைத்துறைக்கு வந்தவர் மொட்டை ராஜேந்திரன். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு தற்போது தான் ஒரு பெயர் கிடைத்துள்ளது. நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். காமெடியாகட்டும், வில்லத்தனமாகட்டும் அசத்திவிடுவார்.
குணசித்திர வேடங்களிலும் ஜொலித்துள்ளார் மொட்டை ராஜேந்திரன்.
கூப்பிடு ராஜேந்திரனை
காமெடியா, வில்லத்தனமா, குணச்சித்திர வேடமா கூப்பிடு நம்ம மொட்டை ராஜேந்திரனை என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சொல்லும் அளவுக்கு நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார்.
ரெமோ
சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் வரும் ரெமோ படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ரெமோ ஒரு சுவாரஸ்யமான படம். அதில் நான் சிறு வேடத்தில் வருகிறேன் என்றார்.
சிம்பு படம்
சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நகைச்சுவை நடிகராக வருகிறேன். இயக்குனர்கள் என்னை காமெடியனாக பார்க்கவே விரும்புகிறார்கள் என்று ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வில்லன்
நான் என் திரை பயணத்தை வில்லன் கதாபாத்திரங்களில் துவங்கினாலும் நான் தற்போது காமெடியன் ஆகிவிட்டேன். இது எனக்கு பிடித்துள்ளது என்று மனம் திறந்துள்ளார் ராஜேந்திரன்.