Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ட்விட்டரில் மோசடி.. கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் ஹரி புகார்!
தனது பெயரைப் பயன்படுத்தி ட்விட்டரிலே மோசடி நடந்திருப்பதாக இயக்குநர் ஹரி சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
தனது உதவி இயக்குநர் மூலம் ஹரி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த அந்தப் புகார் மனு:
சாமி, சிங்கம் உள்ளிட்ட நிறைய தமிழ் படங்களை நான் இயக்கி உள்ளேன். ட்விட்டர் இணையதளத்தில் எனது பெயரில் போலி பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அவதூறான தகவல்கள் எனது பெயரில் பரப்பப்படுகிறது.
இது தனிப்பட்ட முறையில் எனக்கும், எனது சினிமா இயக்குநர் தொழிலுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. போலி இணையதள முகவரியை முடக்கி, இதை எனது பெயரில் தொடங்கியவர் யார் என்று கண்டுபிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் உடனடி நடவடிக்கையை தொடங்கினார்கள். உடனடியாக ஹரி பெயரில் டுவிட்டரில் உள்ள போலி இணையதள முகவரி முடக்கப்பட்டது. அதை தொடங்கியவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.