Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மத்திய அமைச்சரிடம் 8 கோரிக்கைகளை முன்வைத்த பெப்சி... நிறைவேறுமா?
சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் 8 கோரிக்கைகளை பெப்சி(தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு) தலைவர் ஜி.சிவா முன் வைத்திருக்கிறார்.
பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு நேற்று வருகை புரிந்தார். அவரை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி தலைவர் சிவா மற்றும் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
1. மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
2.இலவச மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கிட வேண்டும்.
3. வாரிசுகளுக்கு கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் இடம் வழங்க வேண்டும்.
4. வாரிசுகளுக்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும்.
5.பாரத பிரதமரின் சுரக்ஷா, பீம யோஜனா திட்டங்களின் கீழ் வாழ்நாள் காப்பீடு வழங்க வேண்டும்.
6.ஓய்வுதியம் வழங்க வேண்டும்.
7. மத்திய அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த குறைந்த கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
8.அரசின் சாதனை மற்றும் விளம்பர படங்களில் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும்.
மேற்சொன்ன கோரிக்கைகளை திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்று பெப்சி அமைப்பு கோரிக்கை வைத்திருக்கிறது.
இந்த கோரிக்கைகளை படித்துப் பார்த்த அமைச்சர், அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.