Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இதுவரை இல்லாத ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்- நடிகைகள்!
சென்னை: இன்று நடந்த தேர்தலில் தமிழ் நடிகர் நடிகைகள் பெரும் உற்சாகத்துடன் வந்து வாக்களித்ததைப் பார்க்க முடிந்தது.
தமிழக சட்டமன்றத்துக்கு இன்று நடந்த தேர்தலில் வாக்காளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். ஒரு பக்கம் வெளுத்த மழை, இன்னொரு பக்கம் கொளுத்தும் வெயில் என பருவநிலை படுத்தினாலும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாக்களித்தனர் பொதுமக்கள்.
இன்னொரு பக்கம் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வாக்களித்தது இந்த முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் முதல் நபராக வந்து வாக்களித்தார் ரஜினி. அதேபோல நடிகர் அஜீத் தனது மனைவி மற்றும் தாயாருடன் வந்து காத்திருந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் விஜய் வாக்களித்தார்.
கமல் ஹாஸன், தனது மகள் மற்றும் நடிகை கவுதமியுடன் வந்து வாக்களித்தார்.
நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, விஷால், ஆர்யா, ஜீவா, ராகவா லாரன்ஸ், இமான் அண்ணாச்சி, பிரசன்னா, நடிகைகள் மீனா, த்ரிஷா, நமிதா, ரம்பா என ஏராளமானோர் இன்று காலையிலேயே வாக்களிக்க வந்துவிட்டனர்.
சென்னையில் வாக்குரிமை உள்ள திரையுலக பிரபலங்களில் பெரும்பாலானோர் தவறாமல் வாக்களித்தனர். வெளியூர்களில் வாக்குரிமை உள்ள நடிகர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குப் போய் வாக்களித்தனர். மதுரையில் வாக்குரிமை உள்ள நடிகர் - இயக்குநர் சசிகுமார் கொட்டும் மழையிலும் தனது ஜனநாயகக் கடமையைச் செய்ததோடு, வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திரையுலகப் பிரபலங்கள் இந்த அளவுக்கு திரண்டு வாக்குச் சாவடிக்கு வந்தது இந்த ஆண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது.