Don't Miss!
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நம்ம சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த ஆணும், பெண்ணும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவை அவர் வேலை செய்யும் கிளினிக்கில் வைத்து மிரட்டியுள்ளனர்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சென்னையில் உள்ள கிளினிக் ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆணும், பெண்ணும் மருந்து பரிந்துரை செய்வது தொடர்பாக திவ்யாவை சந்தித்துள்ளனர்.
இது குறித்து திவ்யா கூறியிருப்பதாவது,
மருந்து
அமெரிக்காவை சேர்ந்த ஆண், பெண் மற்றும் இந்தியர் ஒருவர் என் கிளினிக்கிற்கு வந்து தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்குமாறு கூறினார்கள். மல்டிவைட்டமின் மற்றும் கொழுப்புச்சத்தை குறைக்கும் மருந்துகளை கொண்டு வந்தனர்.
முடியாது
அவர்கள் கொண்டு வந்த மருந்துகளில் ஓவர் டோஸாக வைட்டமின் இருந்தது. அதனால் கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பக்கவிளைவுகள் அதிகம் என்பதால் அவற்றை பரிந்துரைக்க மறுத்துவிட்டேன்.
லஞ்சம்
எங்களை நம்பி வருபவர்களுக்கு இதுபோன்ற மருந்துகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்றேன். அதற்கு அவர்கள் எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர்.
இந்தியா
இந்தியாவில் உள்ளவர்கள் எப்பொழுது இதுபோன்று அக்கறையுடன் நடக்கத் துவங்கினீர்கள். எங்களுக்கு இந்தியாவில் பல அரசியல்வாதிகளை தெரியும். வெளிநாட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட இந்தியர்களுக்கு தெரியவில்லை என்றனர். இந்தியாவுக்கே வந்து அவர்கள் இந்தியர்களை தரக்குறைவாக பேசியது அதிர்ச்சி அளித்தது என்றார் திவ்யா.