Don't Miss!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நம்ம சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த ஆணும், பெண்ணும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவை அவர் வேலை செய்யும் கிளினிக்கில் வைத்து மிரட்டியுள்ளனர்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சென்னையில் உள்ள கிளினிக் ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆணும், பெண்ணும் மருந்து பரிந்துரை செய்வது தொடர்பாக திவ்யாவை சந்தித்துள்ளனர்.
இது குறித்து திவ்யா கூறியிருப்பதாவது,
மருந்து
அமெரிக்காவை சேர்ந்த ஆண், பெண் மற்றும் இந்தியர் ஒருவர் என் கிளினிக்கிற்கு வந்து தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்குமாறு கூறினார்கள். மல்டிவைட்டமின் மற்றும் கொழுப்புச்சத்தை குறைக்கும் மருந்துகளை கொண்டு வந்தனர்.
முடியாது
அவர்கள் கொண்டு வந்த மருந்துகளில் ஓவர் டோஸாக வைட்டமின் இருந்தது. அதனால் கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பக்கவிளைவுகள் அதிகம் என்பதால் அவற்றை பரிந்துரைக்க மறுத்துவிட்டேன்.
லஞ்சம்
எங்களை நம்பி வருபவர்களுக்கு இதுபோன்ற மருந்துகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்றேன். அதற்கு அவர்கள் எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர்.
இந்தியா
இந்தியாவில் உள்ளவர்கள் எப்பொழுது இதுபோன்று அக்கறையுடன் நடக்கத் துவங்கினீர்கள். எங்களுக்கு இந்தியாவில் பல அரசியல்வாதிகளை தெரியும். வெளிநாட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட இந்தியர்களுக்கு தெரியவில்லை என்றனர். இந்தியாவுக்கே வந்து அவர்கள் இந்தியர்களை தரக்குறைவாக பேசியது அதிர்ச்சி அளித்தது என்றார் திவ்யா.